Tuesday, 30 April 2013


 THE OTHER SIDE OF LIFE !


  In the midst of everyday routine most of us are like the  piece of paper caught in  a wheel of a cycle ... swirling along with it . Though you might want to get out  its that not that easy  But I realize how very essential to just get away from that swirl and try something different !
I had this great opportunity of  being in Koh Samui a lovely serene island in Thailand recently.
The very first moment when we arrived at the resort we had booked , was absolutely BREATHTAKING !  It was too good and beautiful to be true !  A vast blue, just beautiful blue sea view from the balcony bordered with charming coconut trees and other greeneries all around.....




The thought that we would be spending a month in this exquisitely stunning place was intoxicating !
Such a lovely place is chosen for the Yoga center  where yoga retreats as well as yoga teacher training
has been going on for many years ..
 Let me describe the yoga sessions and the lovely time we had  in my next session !....



Monday, 8 April 2013

வெய்யில் SUN

 வெய்யில்

நிழலின் அருமை வெய்யிலில் இருந்து வந்தால் தெரியும்
உன் அருமை நாங்கள் சொன்னால் தான் புரியும்

பகலும் இரவும் உன் கையில்
நீ நிமிர்ந்தால் பகல் , குனிந்தால் இரவு

துலைவிலுருந்து வெளிச்சம் போட்டு கூப்பிட்டாய்
வேண்டியமட்டும் மின்சாரம் எடுத்துக்கொள் என்று

நீ கோபம் கொண்டு உஷ்ணம் ஏற ஏற
பயத்தில் எங்களுக்கு அன்றோ வேற்க்கிறது

நீ அடிக்க அடிக்க எங்களுக்கு உரைக்கிறது
பொறுக்கமுடியாமல் உனக்காக தலைமுழுகிறோம்

வந்து வந்து ஏன் எங்களை வறுக்கராய்
சிலருக்கு வா வா என்றாலும் மறுக்கறாய்
உனக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை

வெளிநாட்டினர் உன்னில் குளிக்க விழைகின்றனர் (sunbath)
நாங்களோ உன்னால் குளிக்க விரைகிறோம்

உச்சி நேரத்தில் கானல்நீர் கொண்டு யாரை
தார்ரோட்டில் தாரை வார்த்து கொடுக்கின்றாய்

செடி கொடிக்கு உயிர் கொடுத்து ,எங்களை வாழவைக்கிறாய்
அதனால்தான் வணங்கிகறோம் உன்னை சூரிய நமஸ்காரம்கொண்டு.

Wednesday, 3 April 2013

பசுமை நினைவுகள்

 பசுமை  நினைவுகள் 



கடலூரில்.......


பால்ய பருவம் .. அண்ணா , அக்கா , தம்பிகள் என ஜாலியாக சென்ற நாட்கள் ..
பிஸியான அப்பா , டென்ஷனுடன் அம்மா,  வீட்டில் எப்போதும் வேலைக்குதவியாக  ஆட்கள் ....( உதவி மட்டுமில்லை ! பேய் கதைகளும் சொல்லி அச்சப்படுத்தினார்களே ! )

அடிக்கடி மழை புயல் !

நம் எல்லோரும்   குமரகுருவுடன்   நாயுடனும் மைதானம், பீச்  போவது ......

போகும் வழியில்  தம்பிகள்  எந்த மரத்தில் எதை பறிக்கலாம் என்று நோட்டம் விட்டு பின் திருட்டுத்  தனமாய்  பறித்து மாட்டிக்கொண்டது !

ஸ்கூல் போக அடம் பிடித்து கதறக் கதற சைக்கிளில் போகும் குரு !

ஒரு நாள் வளையலை தொலைத்து வந்த போது  போய் திரும்பி தேடு வளையல் இல்லாமல் வராதே என்றதும் வேண்டாத கடவுள் இல்லை .. கடவுளும் கை கொடுத்தார்  வளையல் தெரு ஓரமாக கிடந்தது !

மழை வந்தால் ஸ்கூல் லீவ் . அதுவும்  குரு வேண்டினால் நடக்கும் நிச்சயமாய்  என அசட்டுதனமாய் நினைத்து அவனை வேண்டும்படி கெஞ்சுவது ! அவனும் கண்ணை மூடி வேண்டுவது போல்  நடிப்பது !

மெல்ல மெல்ல திருட்டுத்தனமாய்  கிச்சனில் பாலாடை,  மற்றும் மில்க் பவுடர்  திருட சரியாக  வந்து பின்னால் நின்று கொண்டு எனக்கும் கொடு இல்லேனா மாட்டி விடுவேன் என குரு  மிரட்டுவது !

பண்டிகை, விடுமுறை நாட்களில் உறவினர் பட்டாளம் ! ஒரே துணியில் ஒரே மதியாக எல்லோருக்கும் அப்பா  ட்ரெஸ் வாங்கி தருவது ......

புதிதாக டேப் ரெகார்டர் வாங்கியபோது அப்பாய்   தலைமையில் அட்டகாசமான கலை  நிகழ்ச்சி !

.நடமாட முடியாமல் படுத்திருக்கும் தாத்தா ...அவருக்குதவியாக  ரெட்டியார் 
 எனக்கு பிடித்த ஹிந்தி கிளாஸ

அப்பா மிக ஸ்ரத்தையுடன் அப்பாய்க்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் துர்கா ஸுத்தம் சொல்லிக் கொடுக்க அவனோ வாயில் நுழையாமல் தவிப்பது!

பாட்டு வாத்தியாருடன் நான் பாட இவர்கள் கிண்டலடிப்பது!!
கிரிக்கெட் .விளையாட்டில் நானும் விளையாடி அடிபட்டுக்கொள்வது!
..............
இப்படி இன்னும் பலப்பல இனிய நினைவுகள்.......
தொடரும்

OUR GROUP SONGS