Monday, 8 April 2013

வெய்யில் SUN

 வெய்யில்

நிழலின் அருமை வெய்யிலில் இருந்து வந்தால் தெரியும்
உன் அருமை நாங்கள் சொன்னால் தான் புரியும்

பகலும் இரவும் உன் கையில்
நீ நிமிர்ந்தால் பகல் , குனிந்தால் இரவு

துலைவிலுருந்து வெளிச்சம் போட்டு கூப்பிட்டாய்
வேண்டியமட்டும் மின்சாரம் எடுத்துக்கொள் என்று

நீ கோபம் கொண்டு உஷ்ணம் ஏற ஏற
பயத்தில் எங்களுக்கு அன்றோ வேற்க்கிறது

நீ அடிக்க அடிக்க எங்களுக்கு உரைக்கிறது
பொறுக்கமுடியாமல் உனக்காக தலைமுழுகிறோம்

வந்து வந்து ஏன் எங்களை வறுக்கராய்
சிலருக்கு வா வா என்றாலும் மறுக்கறாய்
உனக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை

வெளிநாட்டினர் உன்னில் குளிக்க விழைகின்றனர் (sunbath)
நாங்களோ உன்னால் குளிக்க விரைகிறோம்

உச்சி நேரத்தில் கானல்நீர் கொண்டு யாரை
தார்ரோட்டில் தாரை வார்த்து கொடுக்கின்றாய்

செடி கொடிக்கு உயிர் கொடுத்து ,எங்களை வாழவைக்கிறாய்
அதனால்தான் வணங்கிகறோம் உன்னை சூரிய நமஸ்காரம்கொண்டு.

No comments:

Post a Comment

OUR GROUP SONGS