அட்டகாச அக்டோபர்
அக்டோபர் மாதம் எங்களுக்கு அட்டகாச, அசத்தல் மாதமே,
எல்லோர் மனமும் களிக்க,
பாச மலர்கள்,
மும்மூர்த்திகள்
கீர்த்தி பெற்று ஜொலிக்க ,
ஜனித்த மாதம்.
நேசம், பாசம் , எங்கள் வசம் வாசம் செய்ய ,
முன்னுரை இன்றி அச்சாரமாக
அக்டோபரில் அவதரித்த
முத்தான மூன்று மலர்கள்.
முத்தான மும்மலர்களில் , முதலாம் மலர்.
*அக்டோபர் எட்டு : வின்னர் விட்டல்*
எட்டுத்திக்கும் எங்கள் வாசம் என்று,
உலகத்தையே வலம் வந்த வள்ளலே
நில்லாது நித்தமும் (உலக) நிலம் அளந்தவரே ,
இன்று பெருங்குடியே
குடில் என்று குடித்தனம்.
வாய் சொல்லில் வீரரே , தங்கள் பாச வலையில், எங்களை வீழ்த்த,
உங்களுக்கு நங்கூரமாக மனதில் கூடாரம் அமைத்து குதூகலிக்கின்றோம்.
என்றும் இதே புத்துணர்ச்சியான ,
பொலிவுடன் வாழ வாழ்த்துகிறோம்.
முத்தான மும்மலர்களில் , இரண்டாம் மலர்.
*அக்டோபர் பதிமூன்று. சாதனை சாமா*
பசுமை துறையில் இளங்கலை பயின்ற , இளவலே
இலகுவாக ஜாவாவை வா வா என்று வசியபடுத்தினாய்.
உந்தன் கலகலப்பு வார்த்தைகளில் மயங்கி , தாரை வார்த்தோம் எங்கள் இதயங்களை.
தந்தையின் ஆங்கில புலமையை தப்பாமல் தத்து எடுத்தாய்.
மடை திறந்த வெள்ளம், எம்மாத்திரம் உன் பேச்சுக்கு முன்னே ,
அதுவே சாட்சி உன் நண்பர்கள் வட்டம், அன்பர்களாகி, மாவட்டமான காட்சி.
என்றும் பசுமையான இளமையாக, வளமுடன் வாழ நல்வாழ்த்துகள்.
முத்தான
மும்மலர்களில் , மூன்றாம் மலர்.
*அக்டோபர் இருபது. லட்சிய லல்லி*
பாச மலர்கள் அனைவரையும் பேச வைத்த பதுமையே ,
உனக்கு வானமே எல்லை
ஆயகலைகள் அறுபத்து நாலு
அத்தனையும் உன் கைகளில் ,
வளையல்லாக அடைக்கலம் ஆன வளைகாப்பு.
உன் எண்ணங்கள் வண்ணங்களாக ,
கைகள் மூலமாக அழகான அணிவகுப்பு.
உன் கணினி தரும், ஒலி, ஒளி
உள்ளத்தை கொள்ளை கொள்ளும்
அறிவொளி
பாசங்களை பட்டை தீட்டி , வைரங்களாக மின்ன வைக்க, என்னே உன் வைராக்கியம்.
நீ "பாச மலர்களை" மனதில் நட்டு , நித்தமும் உறவு என்ற உரம் ஊட்டி
பூத்து குலுங்க வைத்த தமக்கையே
என்றென்றும் புதுப்பொலிவுடன் உன்
முகம் மலர , விழைகின்றோம் , வாழ்த்துகிறோம்.
T. CHANDRASEKHARAN