Saturday, 19 October 2013

BIRTHDAY WISHES

பாசகரங்களால் வாழ்த்துவோம் 

பாசமலர்களை, பூத்து குலங்க வைத்த பூவைக்கு 
அறுபதாம் , அது பொய்த்தது ,உன் தோற்றம் கண்டு 
நடப்பது நாற்பது  என்பதே நம்பும்படியானது .
மலர்களின் வாசம் நித்தம் மறையும் நிதர்சனம்  
ஆனால் , நீ பாச நூலை கொண்டு தொடுத்த பாசமலர்கள் 
எந்நாளும் எல்லோரையும் வசபடுத்தும் வரப்ரசாதம்
தந்தையை தொடர்ந்து வைத்தியராக மனதை வைத்தாய் 
அசராமல் அறிவியல் படித்து பல பரிசுகளை பெற்றாய் 
உன் எண்ணங்களுக்கு  கை வித்தையால்  உயிர் குடுத்தாய்
விதவிதமான கலைகள் உன் கையில் - அது 
சித்திரமோ ,சிந்தனையை தூண்டும் கம்புயுடரோ 
நித்திரையுளும் உன்னால் முடியும் நிஜம்
விட்டலே  உன் விடியல் என்று அவருக்கு தலைவணங்கி 
தாரமானது ,நம் பெற்றோர் உனக்கு  தந்த வரமானதே
இரு கண்களான ,பெண்களை பெற்று, இமை போல் காக்க 
நாடு விட்டு நாடு போய் நல்வழிபடுத்துகறாய்

வாழ்க்கை பாதையில் ஓடுகறாய் - தாரமாய் ,தாயாய்,சகோதரியாய் 
உன் பாத்திரத்தை பவித்தரமாக திறம்பட செய்து 
எல்லார் மனத்திலும் நீங்கா இடம் பிடித்துள்ளாய் 
நம் பெற்றோரிடம்  தவறாமல் நித்தமும் அளவளாவியது  
அவர்களுக்கு அளவில்லா ஆனந்தத்தை அளித்தது 
அதுவே அம்மா உன்னிடம் நேரிடியாக விடை பெற வித்திட்டுது 

எங்களை  பாசவலையில் வீழ்த்திய எங்கள்  பாசமலர் 
இன்று மலர்ந்த நாள் - இனி வரும் எந்நாளும் நன்னாளாக இருக்க 
இறைவனையும் , நம் பெற்றோரையும் வேண்டுகிறோம் , வணக்கிறோம்
எங்கள் லல்லி என்றும் வாடா மல்லி
                                                                              பாசமலர்கள்

2 comments:

  1. This is extremely flattering!
    Im so lucky having such wonderful brothers and
    sisters in law
    Thankyou

    ReplyDelete
  2. Superb poetry diction unmatched

    ReplyDelete

OUR GROUP SONGS