அலைகள்
அலைகளே , அலையாதே , நிலம் வரத் துடிக்காதே !
ஆழ் கடலில் அமைதியாக அமர்ந்திருக்கிறாய் ,
பின் ஏன் கரை வர கலங்குகிறாய்?
எத்தனை முறை திருப்பினாலும் , திரும்புகறாய்
நான் ஒரு பினாமி வைத்தால் , நீ சுனாமியாக வருகிறாய் !
என் கவலைகளைக் களைய , ஆழ் கடல் வரைக் கூட்டிப் போ
என் துயரத்தை துடைக்க தொலைதூரம் என்னைத் தூக்கிப் போ !.
என் பெற்றோர் தவத்தில் அவதரித்தேன் பச்சிளம் பாலனாக ,
குழந்தையாக இருக்கும்வரை கும்மாளந்தான் கொண்டாட்டம்தான்
சிரித்தால் சிரிக் கிறார்கள் , அழுதால் அழுகிறார்கள் .
பின் பள்ளிச் சுமையை ஏற்றினார்கள், படி படி என்று படுத்தினார்கள்
கல்லூரிக்கு கடத்தினார்கள் , கவலையே கரையானது
வாலிப வயசில் வயப்பட்டேன் , வந்தவளே நல்லவள் என்று
என் மதி மயங்கி , நிம்மதி துலைத்தேன் .
கரம் பிடித்தவளே , கடவுள் தந்த வரம் ஆனது
காலங்கள் கவலையின்றி கடந்துபோனது .
குடும்ப சுமையை சுமக்க , வாழ்க்கை எந்திரமானது
தோளோடு தூங்கிய பந்தம், பந்தாடியது !
வாழந்தது போதும் என்று , ஆழ் கடலே அடைக்கலம்
என்று அடங்கவந்தேன் , ஆனால் நீயோ நகரம் நோக்கி நகருகிறாய்
வேண்டாம் நகரம் , அது நரகம் ! அலைகளே என்னை அழைத்துப் போ
நாம் ஆழ்கடலில் ஆனந்தமாக அமைதி கொள்வோம்.
------------- அப்பாய்
ஓடி ஓடி நீ வந்தாய் எதைத் தேடி
அலைகளே , அலையாதே , நிலம் வரத் துடிக்காதே !
ஆழ் கடலில் அமைதியாக அமர்ந்திருக்கிறாய் ,
பின் ஏன் கரை வர கலங்குகிறாய்?
எத்தனை முறை திருப்பினாலும் , திரும்புகறாய்
நான் ஒரு பினாமி வைத்தால் , நீ சுனாமியாக வருகிறாய் !
என் கவலைகளைக் களைய , ஆழ் கடல் வரைக் கூட்டிப் போ
என் துயரத்தை துடைக்க தொலைதூரம் என்னைத் தூக்கிப் போ !.
என் பெற்றோர் தவத்தில் அவதரித்தேன் பச்சிளம் பாலனாக ,
குழந்தையாக இருக்கும்வரை கும்மாளந்தான் கொண்டாட்டம்தான்
சிரித்தால் சிரிக் கிறார்கள் , அழுதால் அழுகிறார்கள் .
பின் பள்ளிச் சுமையை ஏற்றினார்கள், படி படி என்று படுத்தினார்கள்
கல்லூரிக்கு கடத்தினார்கள் , கவலையே கரையானது
வாலிப வயசில் வயப்பட்டேன் , வந்தவளே நல்லவள் என்று
என் மதி மயங்கி , நிம்மதி துலைத்தேன் .
கரம் பிடித்தவளே , கடவுள் தந்த வரம் ஆனது
காலங்கள் கவலையின்றி கடந்துபோனது .
குடும்ப சுமையை சுமக்க , வாழ்க்கை எந்திரமானது
தோளோடு தூங்கிய பந்தம், பந்தாடியது !
வாழந்தது போதும் என்று , ஆழ் கடலே அடைக்கலம்
என்று அடங்கவந்தேன் , ஆனால் நீயோ நகரம் நோக்கி நகருகிறாய்
வேண்டாம் நகரம் , அது நரகம் ! அலைகளே என்னை அழைத்துப் போ
நாம் ஆழ்கடலில் ஆனந்தமாக அமைதி கொள்வோம்.
------------- அப்பாய்
ஓடி ஓடி நீ வந்தாய் எதைத் தேடி
வந்த வேகத்திலே திரும்பினாய்
உள் கடலைக் கூடி
ஆழ் கடலின் அமைதியும் கரை கடலின் கொந்தளிப்பும் !
நுரைக்கின்றாய் நாள் முழுதும் எதை உணர்த்த?
வெளி உலகில் நித வாழ்வில் களிப்பாய் நீ துடிப்பாய்
ஆனால்
ஆழ் மனதில் இறை உணர்வில் அமைதியாய்
எந்நாளும் ஓ மனமே நீ இருப்பாய்
என்றுணர்த்தும் தத்துவமோ சொல் அலையே
-- லல்லி
Dear Lalli,
ReplyDeletenice and meaningful words. good keep it up.
abbai
Abbai & Lalli,
ReplyDeleteI am floored....I want to add something but sattiyil irundhaaldhaane agappaiyil varum
I can only applaud.... I can not poetry regardless of language. May be a report/Column but definitely poems are not my cup of tea
Hi
DeleteThanks for the comments!
Chama, please. Do go ahead with your write up.
Lally