மொழி
பத்து மாதம் தாயின் கருவறையே உறைவிடமானது,
ஊணும் ,உருவமும் தப்பாமல் தாய் தந்தை தந்த வரமானது
இருட்டறையே இருப்பிடம் ஆனாலும், குழந்தை கொடுத்த
முதல் உதையே தாயோடு பேசும் முதல் மொழியானது.
இருண்ட உலகில் இருந்தது போதும் வெளி உலகைக் காண ,
வந்து விடு என்று தாய் மனம் மருகி குழந்தையுடன் பேச்சு கொடுத்தாள். .
உறவுகள் எல்லாம் குழந்தை வரவை ஆவலோடு எதிர் கொள்ள
தாங்கியவள் வலி கொண்டு ஓ என்று அழுததே ,போதித்த மொழியானது .
அதே மொழியில் திருப்பி பேச ,குழந்தை குவா குவா என்று கதறியது .
வேண்டியதை வாடிக்கையாக்க அழு மொழியே வழி மொழியானது
குழந்தையின் சத்தத்தை சுற்றி இருந்தொர் இஷ்ட்டத் திற்கு மொழிபெயர்த்தார்கள்
தவழ்ந்துகொண்டு தத்து பித்து என்று அது மழலை மொழியானது .
கல்லூரி கலாட்டாவில் தமிழுக்கு தாலாட்டு , மற்றதுக்கு வாய்ப் பூட்டு ,
என்ற குரலுக்கு துணைபோனது , மற்றமொழிகள் மௌனியானது .
காதல் வயப்பட்டு கண் விழிகள் பேசியது காதல் மொழியானது.
பத்து மாதம் தாயின் கருவறையே உறைவிடமானது,
ஊணும் ,உருவமும் தப்பாமல் தாய் தந்தை தந்த வரமானது
இருட்டறையே இருப்பிடம் ஆனாலும், குழந்தை கொடுத்த
முதல் உதையே தாயோடு பேசும் முதல் மொழியானது.
இருண்ட உலகில் இருந்தது போதும் வெளி உலகைக் காண ,
வந்து விடு என்று தாய் மனம் மருகி குழந்தையுடன் பேச்சு கொடுத்தாள். .
உறவுகள் எல்லாம் குழந்தை வரவை ஆவலோடு எதிர் கொள்ள
தாங்கியவள் வலி கொண்டு ஓ என்று அழுததே ,போதித்த மொழியானது .
அதே மொழியில் திருப்பி பேச ,குழந்தை குவா குவா என்று கதறியது .
வேண்டியதை வாடிக்கையாக்க அழு மொழியே வழி மொழியானது
குழந்தையின் சத்தத்தை சுற்றி இருந்தொர் இஷ்ட்டத் திற்கு மொழிபெயர்த்தார்கள்
தவழ்ந்துகொண்டு தத்து பித்து என்று அது மழலை மொழியானது .
கல்லூரி கலாட்டாவில் தமிழுக்கு தாலாட்டு , மற்றதுக்கு வாய்ப் பூட்டு ,
என்ற குரலுக்கு துணைபோனது , மற்றமொழிகள் மௌனியானது .
காதல் வயப்பட்டு கண் விழிகள் பேசியது காதல் மொழியானது.
முகம் பார்த்து மூன்று முடிச்சுடன் மூச்சுக் காற்று நெருக்கத்தில்
வாழ்க்கை வழக்கமானபோது மொழி ஏது , வழியலே வாடிக்கியானது
குடும்ப சுமை குத்தகைக்கு வர நெருக்கம் போய் இறுக்கமே இருந்தது
மொழிக்கு முழுக்கு போட்டு பரஸ்பரம் பழிபோடலே பழகிப் போச்சு
கைத்தடி காலத்தில் கரடியா கத்தினாலும் ,எந்த மொழிக்கும் பதில் ஏது !
பின்குறிப்பு !
பல மொழிகள் தெரிந்த விட்டலுக்கு இந்த கவிதை அற்பணிக்கப் படுகிறது
அப்பாய்
Neengae engayo poiteenga brother...
ReplyDeleteoutstanding
poet par excellence, no words to describe the depth of the poem. enjoyed reading it over and over again.
ReplyDelete